Friday, November 11, 2011

மூன்றெழுத்து - 5

மூன்றெழுத்து is an amateur attempt on something like Mastermind with Tamil words.

விதி/வழிமுறைகள் இங்கே.

அகராதி இங்கே.

For those who like the game, but are bored with the current format (me for one), there is some good news. Yosippavar is making an interactive version of this game - and then some - 4 letter and 5 letter variations of the same. All very yummy...I will provide more updates soon.


1. முரடு
2. குணம்
3. மங்கை
4. அவள்
5. பழம்
6. மாயாவி
7. நகம்
8. துள்ளி
9. கனம்
10. ஞமலி


மூன்றெழுத்து - 4 விடை மற்றும் விளக்கம்

       

சரியாகக் கணித்த வித்யா, யோசிப்பவர், மனு,ஹரி பாலகிருஷ்ணன் ,திருமூர்த்தி, இ.கொ, சுர்ஜீத், திருமூர்த்தி அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்.

பயணக்குறிப்பு :
(இ.கொ விடையுடன் அனுப்பியது, அம்சமாக இருந்ததால் அப்படியே போடுகிறேன்)
காரம்,கவணை,கிள்ளை
இது மூணுமே காய் என்பதால் குடும்பதில் சரியான எழுத்து தவிர்த்து வேறு எழுத்து சரியான இடத்தில் இருக்கு. இங்க கா,க,கி மூணும் முதல் இடத்தில் இருப்பதால் கீ,கு,கூ,கெ,கே,கை,கொ,கோ (கௌ எல்லாம் வராதுன்னு நம்பிக்கை) - இவற்றில் ஒண்ணுதான் முதல் எழுத்து.
அடுத்ததாக,
பகல், அழகு ரெண்டுமே ஒரே ஒரு பூதான். இந்த குடும்பம் முதலில் வர எழுத்து என்பதால் இந்த ரெண்டு சொற்களும் நமக்குப் புதுசா ஒண்ணும் சொல்லப் போறது இல்லை. ப,ல்,அ,ழ வரிசையில் வேற ஒண்ணும் இல்லை என்பதைத் தவிர.

சேதம், வாசனை,சந்தி - இந்த மூணும் கூட ஒரே ஒரு பூ. அதாவது சரியான குடும்பம் தப்பான இடம். எனவே ச குடும்பம் உண்டு ஆனா அது மூணாவது எழுத்துதான்.

கடைசியா ஞாயிறு - இதுல எதுவும் வராது.

ஆக முதலெழுத்து - கீ,கு,கூ,கெ,கே,கை, கொ,கோ
இரண்டாம் எழுத்து - ப,ல,அ,ழ,ஞ,ய,வ,ண,ர,ம,ள,ன,த,ந,ற குடும்பங்கள் இல்லாம வேற எதுவாயினும் - மீதியிருப்பது- ட,ங,
மூணாவது எழுத்து - ச குடும்பம்
எளிமையான, புழக்கத்தில் இருக்கும் சொல் என்று சொன்னதால் அகராதியைப் புரட்டவில்லை.
--- என்னும் சொல் உடனடியாகத் தோன்றுகிறது.

2 comments:

Vanchinathan said...

உங்கள் குறிப்புகளில் இரண்டாம் எழுத்து பற்றிய தகவலே இல்லை என்பதாலும்
முதல்/மூன்றாம் எழுத்தின் குடும்பம் மட்டும்தான் தெரிந்திருப்பதாலும் "காட்சி"
என்பதுக்கும் உங்கள் புதிர் பொருந்தி வருமோ?
"கடைசி" என்ற சொல் வருமோ என்று யோசித்தேன் "கவணை" என்பதில் பழம் இல்லை காய்தான் என்று சொல்லியிருப்பதால், 'க' இல்லை என்றாகிவிட்டது.
சிறிய வயதில் கவணையைக் கொள்ளிடத்து மணலில் ஆடிக்காற்றில் உருள‌ விட்டுத் துரத்திப் பிடிக்க முயன்றதை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.

பூங்கோதை said...

வணக்கம் வாஞ்சிநாதன் ..
காரமாய் காய் சொன்னதால் காட்சி காணக் கிடைக்காது. :-)