Sunday, November 27, 2011

மூன்றெழுத்து - 7

விதி/வழிமுறைகள் இங்கே.


அகராதி இங்கே.




1. தவணை
2. புதன்
3. ஆமோதி
4. சூடம்
5. ஞாயிறு
6. ஏந்து
7. குழல்
8. சுருள்
9. முரண்






மூன்றெழுத்து - 5 விடை மற்றும் விளக்கம்

&nbsp&nbsp&nbsp&nbsp&nbsp&nbsp&nbsp

சரியாகக் கணித்த யோசிப்பவர், ஹரி , சுர்ஜித், சாந்தி, வித்யா, மனு அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்.

பயணக்குறிப்பு : (நன்றி: ஹரி)

எல்லாப் பூவிலும் பொதுவானது 'க' மற்றும் 'வ' குடும்பம்.
'க' பழத்திலும் இருப்பதால் இரண்டாம் எழுத்து 'க' தான் இருக்கவேண்டும்.
முதலோ மூன்றாவதோ 'வ' குடும்பம் இருக்க வேண்டும்.
பழம் வார்த்தையில் உள்ள 'அ', 'ழ' குடும்பம் வர முடியாது.
மீதமுள்ள பூ வார்த்தைகளைப் பார்த்தால், 'க', 'வ' குடும்பம் தவிர மற்ற எந்த குடும்பமும் வர முடியாது.
அப்படியானால் மீதமுள்ள குடும்பங்கள் 'ற', 'ண'. இவை இரண்டும் முதல் வார்த்தையில் வர முடியாது.

வ"கற" அல்லது வ"கண" => வைகறை .


(வ" => வ குடும்பம்)